அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பசுமையை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில் அதிரையை சேர்ந்த சுமுக தன்னார்வலர்கள் இணைந்து கடந்த சில மாதங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிரையின் அனைத்து பகுதியிலும் குறிப்பாக நடுத்தெரு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், ஆலடித்தெரு, கடற்கரைத்தெரு, ஈசிஆர் சாலை, மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதுவரையில் 326 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மரக்கன்றுகளை ஆடு, மாடுகளிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு மரக்கன்றை சுற்றி கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த திட்டத்தை அதிரையின் பிற பகுதிகளிலும் குறிப்பாக மேலத்தெரு, கீழத்தெரு, பிலால் நகர், ஆதம் நகர், நெசவுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுத்த இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரக்கன்றுகள் நடும் பணி குறித்து அதிரை சுகாதார முன்னேற்ற கழகத்தின் முன்னோடி அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் நம்மிடம் கூறியதாவது...
'அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமையை ஏற்படுத்தும் முயற்சியாக பல்வேறு பகுதிகளில் 1000 மரக்கன்றுகள் நடுதல், நீர் நிலைகளை அதிகப்படுத்துதல், குடியிருப்பு பகுதியில் காணப்படும் கருவேல மரங்களை அகற்றுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றை இலக்காக கொண்டு அதிரையை சேர்ந்த தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியாக இந்த பணிகளை கடந்த சில மாதங்களாக செயல்படுத்தி வருகிறோம். இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் மிகுந்த வரவேற்பும், ஆதரவும் அளித்து வருகின்றனர்.
மரக்கன்றுகள் நடப்பட்டதோடு விட்டுவிடாமல் மரக்கன்றுகள் நடப்பட்ட இடங்களை தன்னார்வலர்கள் தொடர்ந்து கண்காணித்து பாதுகாத்து வருகின்றனர். தன்னார்வலர்களின் இந்த பணி தொடர்பாக அதிரை பொதுநல விரும்பிகளிடமிருந்து ஆதரவும், சிறந்த ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது' என்றார்.
மரக்கன்றுகள் நடும் பணி குறித்து அதிரை சுகாதார முன்னேற்ற கழகத்தின் முன்னோடி அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் நம்மிடம் கூறியதாவது...
'அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமையை ஏற்படுத்தும் முயற்சியாக பல்வேறு பகுதிகளில் 1000 மரக்கன்றுகள் நடுதல், நீர் நிலைகளை அதிகப்படுத்துதல், குடியிருப்பு பகுதியில் காணப்படும் கருவேல மரங்களை அகற்றுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றை இலக்காக கொண்டு அதிரையை சேர்ந்த தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியாக இந்த பணிகளை கடந்த சில மாதங்களாக செயல்படுத்தி வருகிறோம். இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் மிகுந்த வரவேற்பும், ஆதரவும் அளித்து வருகின்றனர்.
மரக்கன்றுகள் நடப்பட்டதோடு விட்டுவிடாமல் மரக்கன்றுகள் நடப்பட்ட இடங்களை தன்னார்வலர்கள் தொடர்ந்து கண்காணித்து பாதுகாத்து வருகின்றனர். தன்னார்வலர்களின் இந்த பணி தொடர்பாக அதிரை பொதுநல விரும்பிகளிடமிருந்து ஆதரவும், சிறந்த ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது' என்றார்.
adirainews








No comments:
Post a Comment